Adhikalai Alaral
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Kanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Kaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Kodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Amma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Unakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Chakkalathi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Adhikalai Alaral
Related ebooks
Thalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Nizhalodu Rating: 5 out of 5 stars5/5Perapillai Rating: 5 out of 5 stars5/5Nilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Vaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Kaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Nilavu Varum Rating: 5 out of 5 stars5/5Vizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye Kaadhalenbathu… Rating: 0 out of 5 stars0 ratingsPalaar Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingsNesam Nenjukkulle Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsPazhagi Pakkanum! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Karaium Neram Rating: 0 out of 5 stars0 ratingsUtharavin Padi Uyir Rating: 5 out of 5 stars5/5Enge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsPulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsMelathaalam... Rating: 0 out of 5 stars0 ratingsNee En Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Ennai Konjum Saaral Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Regai Rating: 0 out of 5 stars0 ratingsKowsalya! Rating: 0 out of 5 stars0 ratingsManjal Kannadi Rating: 0 out of 5 stars0 ratingsSanthaikku Vantha Kili Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Pothum Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Adhikalai Alaral
0 ratings0 reviews
Book preview
Adhikalai Alaral - Devibala
http://www.pustaka.co.in
அதிகாலை அலறல்
Adhikalai Alaral
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
க
ண் இமைகளின் மேல் சன்னமாகஅதைத் தடவிக் கொண்டாள் வர்ஷா. உதட்டுச் சாயத்தைப் பரவலாக்கிக் கொண்டாள். மஸ்காரா அளவை இன்னும் கொஞ்சம் கூட்டிக்கொண்டு கண்ணாடியில் முழுமையாகத் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
ஒப்பனை முடிந்து விட்டது என்ற திருப்தி ஏற்பட்டது.
வார்ட் ரோபுக்கு வந்து ஷட்டரை இழுத்தாள். விதவிதமான உடைகள். அதற்குக் கீழே பொருத்தமான காலணிகள்.
ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டாள். அதற்குப் பொருத்தமான கைப் பையைச் சேகரித்துக் கொண்டாள்.
இன்டர்காம் அழைத்தது.
‘அப்பா தான்!’
என்னப்பா?
என் ரூமுக்குக் கொஞ்சம் வருவியாம்மா?
வர்றேன்பா!
மெல்ல நடந்து அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள்.
ஏதாவது அவசர நிகழ்ச்சியாம்மா?
ரோட்டரி க்ளப் மீட்டிங் இருக்கேப்பா இன்னிக்கு.
போகலைனா, தப்பாம்மா?
ஏன்? நான் வேற எதுக்காவது வேணுமா?
விருந்தாளி ஒருத்தர் வர்றார். நீயும் இருந்தா நல்லா இருக்கும்முன்னு நினைச்சேன்.
யாரப்பா?
ஜஸ்ட் ஒரு விருந்துதான். இன்னிக்கு நம்மை விட ஒரு படி மேலே நிக்கிறவர் ஆச்சே கருணாகரன். அவர் நட்பு நமக்கு பெரிய அளவுல உதவுமா.
கருணாகரன் பிள்ளை ஷ்யாம் அகங்காரம் பிடிச்சவர்னு சொல்றாங்க.
பொறமை பிடித்தவங்க பலவிதமாப் பேசுவாங்க. நம்மைப் பொறுத்த வரைக்கும் எல்லாரும் நல்லவங்க. ஷ்யாமும் வரப்போறான்.
அப்பா.
"சொல்லும்மா. ’’
உங்க உத்தேசம் வெறும் நட்பு ரீதியான விருந்து மட்டும்தானா?
வேறென்னம்மா?
ஷ்யாம் வர்றார். என்னையும் இருக்கச் சொல்றீங்க. உள்நோக்கம் ஏதாவது உண்டா?
சிரித்தார் கோபால்சாமி.
ஏம்பா சிரிப்பு?
ஒரு புத்திசாலி மகளைப் பெத்துட்ட பூரிப்பு. அதனாலதாம்மா விளம்பரக் கம்பெனிக்கு உன்னை எம். டி. யாக்கினேன். ஊடுருவிப் பாக்கிற ஆற்றல் என்னைவிட உனக்கு அதிகம்.
என்னைப் புகழறது அப்புறம். பேசி முடிச்சாச்சா கருணாகரன்கிட்ட?
என்னம்மா நீ?உன்னைக் கேட்காம செய்வேனா?உத்தேசம் அவருக்கும் இருக்கு. விளம்பர நிறுவனம் மூலம் பெரிய அளவுல நீ அடைஞ்ச புகழ் இங்கே எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. ஃபெமினால உன்னைப் பற்றின ‘கவர் ஸ்டோரி’வந்தப்ப கருணாகரன் படிச்சிருக்கார் அதை. என்னைச் சந்திக்க ஆபீஸ் வந்தார். உன்னைப் பற்றி நிறையக் கேட்டார். ஷ்யாமைக் கூப்பிட்டு வர்றேன்னுஅவராத்தான்மா சொன்னார்.
இப்பக் கல்யாணம் பண்ணிக்க நான் இஷ்டப் படலைப்பா.
உனக்கு வயசு இருப்பத்தி ரெண்டுமா. எத்தனைக் காலம் தாமதிக்கமுடியும்?கருணாகரனோட ஃபைபர் யூனிட்ல லட்சக்கணக்கா லாபம் காட்டறான் அவர் பிள்ளை ஷ்யாம். லண்டன்ல போய்ப் படிச்சிட்டு வந்தவன். ஆவனை மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைச்சா, நல்ல இடத்துல உன்னை ஒப்படைச்ச திருப்தி எனக்கும் இருக்குமேம்மா.
சரிப்பா வரட்டும். ஆனா எதுக்காகவும் என் சொந்த ஆசைகளை, சுதந்திரத்தை நான் விட்டுத் தரமாட்டேன்.
அது எனக்குத் தெரியாதாம்மா?
வாசலில் ஹாரன் சப்தம் கேட்டதுஇ
சாக்லெட் நிற காண்டெசா க்ளாஸிக் வெண்ணைக்கட்டி போல் வந்து நின்றது.
கோபால்சாமி எழுந்தார் வரவேற்க.
நீயும் வாம்மா.
அவசியமில்லைப்பா. நீங்க போய் வரவேற்றா போதும்
அவர் வாசலுக்கு வந்துவிடஇகருணாகரன் படியேறி விட்டார். காரின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் ஷ்யாம்.
வாங்க கருணாகரன். வாங்க ஷ்யாம்!
கருணாகரன் முகமெல்லாம் சிரிப்பாக நுழைந்தார். கோபால்சாமி கையைப் பற்றிக் குலுக்கினார். ஷ்யாம்இசிரித்தால் மேலுதடு கிழிந்து விடுமோ என்று பயந்தது போலஇவெகு அலட்சியமாக நடந்து வந்தான்.
சோபாவில் உட்கார்ந்திருந்தாள் வர்ஷா.
இவதான் என் மகள் வர்ஷா.
ஹலோ!
இருவருக்கும் பொதுவாகச் சொல்லி விட்டு, அங்கேயே உட்கார்ந்திருந்தாள்.
ஜூஸ் ட்ரேயில் வந்தது.
ஷ்யாம் எடுத்துக் கொள்ளவில்லை.
"உன்னைப் பற்றிப் பத்திரிகைல படிச்சேன்மா. ரொம்ப சந்தோஷமா இருந்தது. அட்டைல வந்த போட்டோவை விட நேர்லஇஅழகா இருக்கே சின்ன வயசுல புத்திபூர்வமா நிறைய சாதிக்கறே நீ… வாழ்த்துக்கள்’’கருணாகரன் புகழ
தேங்க்யூ அங்கிள்!
நீ ஃபெமினா பார்த்தியா ஷ்யாம்?
அவன் அலட்சியமாகத் தோளைக் குலுக்கி, உதட்டைப் பிதுக்கினான். நான் பத்திரிகைகளே படிக்கறதில்லை. நேரமில்லை!இன்ஃபாக்ட, எனக்கு அதுல நம்பிக்கையும் இல்லை. இவன்ஒருத்தரை பேட்டி கண்டுஇ‘கவர் ஸ்டோரி’ போட்டுட்டா, அந்த நபருக்கு நிஜமாவே திறமை இருக்குனு அர்த்தமா?
புருவம் சுருக்கினாள் வர்ஷா.
ஏன்?விளம்பரக் கம்பெனிகளை திறமையா நடத்தற ஆண்கள் இந்த நாட்ல இல்லையா? பொம்மளை பத்தி எழுதினா, அட்டைல கவர்ச்சியா படம் போட்டா, சர்க்குலேஷன் ஏறும். வியாபார புத்தி!
உங்க கருத்தை நான் அப்ஜெக்ட் பண்றேன் ஷ்யாம்!
ஸே மிஸ்டர்!
ஓக்கே! பத்திரிகைகளைத் தரக்குறைவாப் பேசாதீங்க. சர்க்குலேஷன் தான் நோக்கம்னா, அதுல என்ன தப்பு?தன் வருமானத்தை அதிகரிக்க நீங்களும், நானும் தந்திரம் பண்ணலையா?யார் செய்யலை இந்த பூமில? பெண்கள் கவர்ச்சி காட்டி அதன் மூலம் அடைய நினைக்கறாங்கனு பேசறதை இனிமே நிறுத்துங்க.
வொய்? அது தான் நிஜம்?
அது ஓரளவுக்குத்தான் நிஜம். தன் திறமைல எல்லாத் துறைகளிலும் உச்சில நிற்க பெண் ஆசைப்படறா. ஆதனால உழைக்கறா. போராடி ஜெயிக்கறா. மாநிலத்துல முதலாவது யாருன்னு பார்த்தாபடிப்புல ஒரு மாணவிதான் வந்து நிக்கிறா. ஆண்களால பல சமயம் சாதிக்க முடியறதில்லை. எது தன் பலவீனம்னு பார்த்து அதைச் சரிகட்டற பக்குவம் வரலை. பெண் பார்த்து அதைச் சரிகட்டற பக்குவம் வரலை. பெண் வெற்றியை சகிச்சுக்க முடியறதில்லை. இழிவாகப் பேசி தன் தோல்வியை திசை திருப்பறது ஆண்கள் தான்!
ஸ்டாப் இட் ஐ ஸே!
ஷ்யாம் கத்தினான்.
கருணாகரன், கோபால்சாமி இருவரும் பயந்து போனார்கள்.
இயல்பான விவாதமாகத் தொடங்கி, அது வீரியமடைந்து விவகாரமாக மாறும் என்று எதிர் பார்க்க வில்லை.
வர்ஷா போதும்மா. அவர் கருத்தை அவர் சொன்னார்.
விட்ரா ஷ்யாம். எதுக்குக் கோபம்?
இல்லை அங்கிள். கோவப்பட எனக்குத் தெரியாது. பெண்களைப் பற்றின இழிவான ஒரு கண்ணோட்டத்தை உங்க பிள்ளை மாத்திக்கணும்.
அவனைக் கல்யாணம் பண்ணிட்டு, அதை நீ மாற்றும்மா. நானே உங்க வழில குறுக்கிட மாட்டேன்.
ஆமாம் கருணாகரன்! முதல்ல முடிச்சுப் போட்டு விட்ருவம். அப்புறம் அவங்க பாடு.
டாடீ! வர்ஷாகிட்ட தனியாகக் கொஞ்சம் பேசணும்.
போயேன்மா.
வர்ஷாவுக்கு அது பிடிக்கவில்லை. ஆனாலும் அப்பாவை எதிர்க்க வேண்டாம் என்று எழுந்து போனாள்அவனுடன்.
தனியறைக்குள் நுழைந்தார்கள்.
எனக்கு உன்னைப் ரொம்ப பிடிச்சிருக்கு வர்ஷா!
அவள் பேசவில்லை.
அந்த ஃபெமினா நானும் பார்த்தேன். அட்டைல இருந்த உன்னை ரசித்தேன். உள்ளே இருந்த மேட்டரை நான் படிக்கலை. அது எனக்கு அவசியம் இல்லை.
ஏன்?
பெண் தொழிலதிபராகி, பத்திரிகைல பேட்டி தந்து, புகழ் ஏணில ஏறி, நோ… எனக்கு இதுவெல்லாம் உடன்பாடு இல்லை வெல், நீ அழகா இருக்கே. நான் அறிவோட, நிறைய சம்பாதிக்கவும் செய்யறேன். கோடிக்கணக்கான சொத்துக்கள் எனக்கே இருக்கு. நீ சம்பாதிச்சு எதுவும் ஆக வேண்டாம். என் அறிவும் உன் அழகும் சேரட்டும். சந்தோஷமா தாம்பத்யம் நடத்தலாம். ஓக்கே?
சிரித்தாள் வர்ஷா.
ஏன் சிரிக்கிறே?
உங்களுக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. தேங்க்ஸ். பட் எனக்கு உங்களை பிடிச்சிருக்கானு கேட்டீங்களா?
எதுக்கு கேட்கணும்?
"வாவ்! இதுக்குப் பேருதான் ஆணாதிக்கம்!பெண் விருப்பம் கேட்கப்படணும். அது தான் மரியாதை. வெல்