Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Virpanaiku Alla
Virpanaiku Alla
Virpanaiku Alla
Ebook101 pages55 minutes

Virpanaiku Alla

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100400310
Virpanaiku Alla

Read more from Rajesh Kumar

Related to Virpanaiku Alla

Related ebooks

Reviews for Virpanaiku Alla

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Virpanaiku Alla - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    விற்பனைக்கு அல்ல

    Virpanaikku Alla

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    காலை மணி 9.45. டி.எஸ்.பி. அலுவலகம்.

    எஸ்.பி. நம்பெருமாள் தன்னுடைய பைக்கை வேகமாய் உள்ளே விரட்டி டூ வீலர்ஸ் பார்க்கிங்கில் நிறுத்தி ஸ்டாண்ட் போட, ஒரு எஸ்.ஐ. ஓடி வந்து சல்யூட் அடித்து நின்றார். நம்பெருமாள் தன்னுடைய அடர்த்தியான மீசையை இடது கை ஆட்காட்டி விரலால் நிரடிக் கொண்டே அந்த எஸ்.ஐ.யை ஏறிட்டார்.

    கனகவேல்…

    ஸார்…

    இன்னிக்குத்தானே குறை தீர்க்கும் நாள்…?

    ஆமா… ஸார்…

    பப்ளிக் எத்தனை பேர் வந்து இருக்காங்க?

    போன வாரத்தைக் காட்டிலும் அதிகம் ஸார்.

    அதிகம்ன்னா எவ்வளவு…?

    போன வாரம் அம்பத்தொன்பது பேர் வந்து இருந்தாங்க ஸார். இந்த வாரம் தொண்ணூற்றி ஆறு பேர் ஸார்… லேடீஸ் இன்னிக்கு அதிகம்.

    அரசியல்வாதிகள் யாரும் உள்ளே இல்லையே?

    இல்ல ஸார்… எல்லாரையும் சரியானபடி விசாரிச்சு தான் உள்ளே அனுப்பியிருக்கேன்.

    வாங்க… பார்த்துடலாம்… சொன்ன நம்பெருமாள் வேகவேகமாய் நடை போட்டு வராந்தாவின் கோடியில் இருந்த அந்த ஹாலுக்குள் நுழைந்தார். காத்திருந்த பத்திரிகை நிருபர்கள் எதிர்கொண்டார்கள். சூழ்ந்து கொண்டார்கள்.

    ஸார்… சின்னதாய் ஒரு பேட்டி…

    நம்பெருமாள் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். ஸாரி… இந்த வெட்டிப் பேட்டிக்கெல்லாம் எனக்கு நேரமில்லை. மக்கள் தங்களோட குறைகளைச் சொல்றதுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்க. அவங்களை காக்க வைக்க நான் பிரியப்படலை…

    ப்ளீஸ் ஸார்… சுருக்கமா நாலைஞ்சு கேள்வி மட்டுமே…! உங்களைப் போன்ற போலீஸ் அதிகாரிகள் மக்கள் நலனுக்கான காரியங்களைச் செய்யும்போது ப்ரஸ் மீடியா அதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாதே…? அதை பெரிய அளவில் பப்ளிஷ் பண்ண வேண்டாமா…?

    ஓ.கே… ஓ.கே… இப்ப என்ன கேட்கப் போறீங்க…?

    ஸார்… ஒவ்வொரு வாரமும் மக்களை இங்கே வரவழைச்சு அவங்க குறைகளைக் கேட்டு உடனடியாய் நடவடிக்கை எடுக்கறீங்க…! இதுவரைக்கும் எடுத்த நடவடிக்கைகளால் ஏதாவது பயன் கிடைச்சிருக்கா… ஸார்…?

    கண்டிப்பா…! நான் அரசியல்வாதி கிடையாது. ஒரு போலீஸ் அதிகாரி. சூப்ரிண்டெண்ட் ஆஃப் போலீஸ். ஒரு எஸ்.பி.யின். எல்லைக்கு உட்பட்டு என்னென்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாமோ அதையெல்லாம் எடுத்து பொதுமக்களோட பிரச்னைகளைத் தீர்த்து வைச்சிருக்கேன்…

    நீங்க ஒருத்தர் மட்டும் இப்படிச் செயல்படறதால எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துடும்னு நினைக்கறீங்களா ஸார்?

    நீங்க ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்…! ஏதோ நான் ஒருத்தன் மட்டும்தான் கடமை தவறாத போலீஸ் அதிகாரி மாதிரி செயல்படறதாய் நீங்க நினைக்கக் கூடாது. எல்லா போலீஸ் அதிகாரிகளும் தங்களுடைய கடமைகளில் கண்ணும் கருத்துமாய் இருக்கத்தான் செய்யறாங்க… புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்கறாங்க… குற்றவாளிகளை திறம்படக் கண்டுபிடிக்கறாங்க… எனக்குள்ளே இருக்கற ஒரு மனக்குறை என்னன்னா பொதுமக்கள் போலீஸைப் பார்த்து அநாவசியத்துக்கு பயப்படறதுதான். ஒரு புகார் கொடுக்கிறதுக்குக் கூட தைரியமா யாரும் முன் வர்றது இல்லை. இதுல படிக்காதவங்களைவிட படிச்சவங்க அதிகம். போலீஸ் ஸ்டேஷன் வாசற்படி ஏறினாலே மானம் மரியாதை போயிட்டதாய் நினைக்கறவங்களும் இருக்கிறாங்க. அப்பேர்ப்பட்டவங்க எல்லாம் மாறணும். போலீஸைப் பார்த்து யாரும் பயப்படக் கூடாது. ஒரு நண்பன் கிட்டே தன்னோட மனக்குறைகளை சொல்ற மாதிரி ஒரு போலீஸ் அதிகாரி கிட்டே பிரச்னைகளைச் சொல்லணும். பொதுமக்களில் பலர் கோழைகளாய் இருக்கிறதாலதான் சமூக விரோதிகள் தைரியமாய் சட்டத்தை தன்னோட கையில் எடுத்துக்கிட்டு அராஜகம் பண்றாங்க. யாரோ என்னமோ பண்ணிட்டுப் போறாங்க என்கிற மனப்பான்மையில் பொதுமக்களும் இருக்காங்க… இந்த நிலையைச் சரிப்படுத்தணும்னா அதுக்கு ஒரே வழி பொதுமக்கள் போலீஸ் கிட்டே பயமில்லாமே வரணும்… புகார்களைச் சொல்லணும். அந்த புகார்களின் பேரில் உடனடியாய் உறுதியாய் நடவடிக்கை எடுக்கப்படும்போது, பொதுமக்களுக்கு போலீஸ் துறை மேல் ஒரு நம்பிக்கை ஏற்படும். அதைத்தான் நான் இப்போ பண்ணிட்டிருக்கேன்…

    ஸார்…! நான் ஒரு கேள்வி கேட்டா நீங்க கோபப்படக்கூடாது…

    சட்டத்தை யாராவது மீறினாத்தான் எனக்குக் கோபம் வரும். நீங்க ப்ரஸ் பீப்பிள். தாராளமாய் எந்த ஒரு கேள்வியையும் தயக்கமே இல்லாமே கேட்கலாம்… ப்ளீஸ், உங்க கேள்வி என்ன…?

    அந்த நிரூபர் சில விநாடிகள் தயங்கிவிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1