Enthanuyir Kaadhalaney!
5/5
()
About this ebook
Read more from Vidhya Subramaniam
Nilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Mudhal Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsCauvery Karaiyil Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsThunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Pon Veenai Rating: 0 out of 5 stars0 ratingsAsaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsOomathai Pookkal Rating: 4 out of 5 stars4/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Varuvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Kaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Vittil Poochigal Rating: 5 out of 5 stars5/5Aval Mugam Kaana Rating: 4 out of 5 stars4/5Kopura Vasal Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Malargale Malarungal Rating: 5 out of 5 stars5/5Kaagitha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsAgayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Enthanuyir Kaadhalaney!
Related ebooks
Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsKankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsNaanendrum Neeyendrum...! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Nilavey Mugam Kattu Rating: 5 out of 5 stars5/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Thanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Malai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKannalaney Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Koovum Solai! Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Dairy Rating: 5 out of 5 stars5/5Paattu Kalanthidavey Part 3 Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsAsaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyum Ivargal Rating: 0 out of 5 stars0 ratingsNadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Eppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5Kolla Theriyavillai! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsVasanthame Varuga Rating: 5 out of 5 stars5/5Velichathai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathai Thirudathe! Rating: 3 out of 5 stars3/5Nenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Sollathaan Ninaikiren Rating: 5 out of 5 stars5/5Vaanathu Nila Rating: 5 out of 5 stars5/5Vizhigalil Ethanai Mozhigal! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Enthanuyir Kaadhalaney!
1 rating0 reviews
Book preview
Enthanuyir Kaadhalaney! - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
எந்தனுயிர்க் காதலனே…
Enthanuyir Kaadhalaney…
Author :
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For other books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
எந்தனுயிர்க் காதலனே…
1
அந்தி மயங்கும் மாலை வேளை. மேற்கு வானத்தில் செங்கோளமாய் மறைந்து கொண்டிருந்தான் சூரியன். தன் பிரகாசம் பட்ட இடத்தையெல்லாம் ரத்தச் சிவப்பாய் மாற்றியபடி வேகமாய் கீழே இறங்கிக் கொண்டிருந்த சூரியனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், வசுமதி.
எதிர்வீட்டு வாசலில் தள்ளுவண்டி ஒன்று வந்து நிற்க. அதிலிருந்த இரண்டு வாழை மரங்களை ஒருவன் இறக்கினான். விடிந்தால் அருணுக்கு கல்யாணம். கூலியாட்கள் வாழை மரத்தை வாசலுக்கு இருபுறமும் கட்டினார்கள். கல்யாணம் சத்திரத்தில்தான். இருந்தாலும், வீடும் மங்கலம் பெற வேண்டும் என்பதற்காக வீட்டிலும் வாழை மரம் கட்டினார்கள், எதிர் வீடு பூட்டியிருந்தது. யாரும் இல்லை. இந்நேரம் மாப்பிள்ளை அழைப்புக்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருப்பார்கள். மணப்பெண்ணுக்குரிய அறையில் பட்டுப்புடவையும், நெற்றிச்சுட்டியும், திருகுப்பூவும், ஜடை அலங்காரமும், கன்னத்திலும் கண்களிலும் வெட்கச் சிவப்புமாக அமர்ந்திருக்க வேண்டியவள் இங்கே அந்திச் சூரியனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அடிவயிற்றிலிருந்து உருண்டு திரண்டு வந்த துக்கத்தை உதட்டை கடித்து விழுங்கப் பார்த்தாலும், அது. அவளை ஏமாற்றி கண்ணிர்க் கோடுகளைப் போடத்தான் செய்தது.
அறைக்கதவை யாரோ தட்டினார்கள். கூடவே 'வசு வசு' என்ற அப்பாவின் குரலும் கேட்க, வசுமதி சட்டென்று முகத்தை துடைத்துக் கொண்டாள்.
கதவு திறந்துதாப்பா இருக்கு.
அடுத்த நிமிடம் கதவைத் திறந்து கொண்டு அப்பா உள்ளே வந்தார். மகளின் சிவந்திருந்த கண்களை கவனித்தவரின் முகம் மாறியது.
வசு... அழுதியாடா?
இ… இல்லப்பா...
அப்படின்னா கல்யாணத்துக்கு வரயா வசு என்னோட?
அப்பா... நா...
நா… உன்னை தைரியசாலின்னு நினைச்சேன் குழந்தே!
வசு தலை குனிந்து கொண்டாள். சிவப்பிரகாசம் கிட்டே வந்து அவள் தலையை ஆதுரத்தோடு தடவினார்.
தலையைத் தடவின கை மெல்ல அவள் முதுகிலும் படிந்து தைரியம் சொல்வதுபோல் தட்டிக் கொடுக்க, வசு உடைய ஆரம்பித்தாள்.
சரி, சரி வேண்டாம் வசு. நா. மட்டும் போய்ட்டு வந்துடறேன்.
அவர் சட்டென்று வெளியேறினார். வசுமதி பிரமை பிடித்ததுபோல் உட்கார்ந்திருந்தாள். எவ்வளவு நேரமோ? விளக்கு கூடப் போட்டுக்கொள்ளாமல் இருட்டிலேயே உட்கார்ந்திருந்தாள்.
இந்த வானமும் கடலும் பூமியும் சூரியனும் சந்திரனும் கோடானு கோடி வருஷமா இருக்கறது உண்மைன்னா நம்ம காதலும் உண்மை வசு. நம்ம கல்யாணத்துக்கப்புறம் இதே கடற்கரைக்கு வந்து, நாங்க கல்யாணம் பண்ணிண்டாச்சு, உங்களுக்கெல்லாம் சந்தோஷமான்னு ஒவ்வொண்ணா பார்த்து கேட்பேன்.
எதையெல்லாம்?
இந்த கடலை, வானத்தை, நட்சத்திரங்களை, சந்திரனை, இந்த கடல் மணலை, இதுல இறைஞ்சு கிடக்கிற கிளிஞ்சல்களை, கடலோரம் ஒடற நண்டுகளை எல்லாத்தையும் கேட்பேன்.
கண்டல்காரனையும் ஐஸ் வண்டிக்காரனையும்...??
மாட்டேம்பா! அவங்களை கேக்கவே மாட்டேன்!
ஏனாம்?
அவங்க சந்தோஷமாப் படுவாங்க? மனுஷங்களுக்கே பொறாமை ஜாஸ்தியாச்சே. சந்தோஷமாப்பான்னு கேட்டா, ம்ஹம்னு பெருமூச்சு விடுவான் உஷ்ணமா! தேவையா சொல்லு!
பொறாமை பெருமூச்சுன்னு ஏன் நினைக்கனும்: வருத்தத்துலயும் வருமே பெருமூச்சு!
எதுக்கு வருத்தம்?
என்னைப் பார்த்துதான். ம்... ம்...! நீ கொடுத்து வெச்சது அவ்ளோதானா பெண்ணே. கடைசியில இந்தாள் கைல போய் மாட்டிக்கினியே. ஊர்ல எத்தினி பசங்க - ராஜா கணக்கா இருக்காணுங்க. கடைசியில இதுங்க கைல. ஆ... ஆ. ங்... விடுங்க அருண்! அப்பா! இதென்ன காதா, இல்ல என்னன்னு நினைச்சு இப்படி திருகறீங்க.
இனிமே இப்படி பேசுவியா சொல்லு.
பேசுவேன். கழுத்துல மூணு முடிச்சு போடறவரைக்கும் பேசுவேன்.
அப்புறம்? அப்புறம் தினம் என் காலைத் தொட்டு கண்ணுல ஒத்திப்பியா?
ச்சேச்சே! தூங்கி எழுந்ததும் இந்த கொழுக் மொழுக் கன்னத்தை ஒரு கடி கடிச்சு எழுப்பி பெட் காபி ரெடியான்னு கேப்பேன்.
அறஞ்சேன்னா...!
சட்டென்று சிரித்து விட்டான் அருண். உனக்காக காபி என்ன வசு? சமையலே செய்வேன். உன்னை கண்ணுக்குள்ள வெச்சுப் பாதுகாப்பேன்."
பார்க்கத்தானே போறேன்.
"கிண்டல். வேணாம். நம்ம அறுபதாம் கல்யானத்தன்னிக்கு ராத்திரி நீயே சொல்லுவ பார்.:
வசுமதி குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.
வசு விளக்கைப் போட்டாள். அறையில் பிரகாசம் பரவியது. மேஜை இழுப்பறையைத் திறந்தான்.
அருண் அவளுக்கு எழுதிய கடிதங்கள். அவன் தன் உத்யோக விஷயமாக ஒரு மேல் பயிற்சிக்காக ஜெர்மன் போயிருந்தபோது எழுதிய கற்றை கற்றையான கடிதங்கள்.
வசு எல்லாவற்றையும் எடுத்தாள். அடியில் அருணின் புகைப்படம். மாஸ்கோவிலிருந்து அவன் அனுப்பியிருந்த வண்ணப் புகைப்படம். காற்றில் கலைந்து பம்மென்றிருந்த கறுத்த முடி, உதட்டில் விஷமச் சிரிப்பு, குறுகுறுக்கும் கண்கள், தேக்குமரத்தில் செதுக்கியது போல் நெடிய உருவம், என்ன கம்பீரம்! இந்த கம்பீரம்தானே அவளைச் சுருட்டி அவன் காலடியில் தள்ளியது.
வசு கடிதங்கள், புகைப்படங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக அடுக்கி சுக்கல் சுக்கலாக கிழித்தாள். ஜன்னல் வழியே பறக்க விட்டாள். அருணின் புகைப்படத்திலிருந்து ஒரு துண்டு. அதில் சிரித்த அவன் முகம் அவன் வீட்டில் கட்டியிருந்த வாழை மரத்தில் பறந்து போய் விழுந்தது. அவன் வீட்டு வாசலில் பெரிசாய் மலர்ந்திருந்த கோலம் முழுக்க கடிதத் துண்டுகள் சிதறி விழுந்தன.
வசுமதி பாத்ரும் சென்று முகத்தை சோப் போட்டு அலம்பிக் கொண்டாள். பிறகு என்ன நினைத்தாளோ, ஷவரைத் திருகிவிட்டு அதனடியில் முழுக்க நனைந்தாள். தலை முழுகினாள்.
தலை துவட்டி மாற்றுடை அணிந்து அவள் கீழே. வந்தபோது மணி ஒன்பதடித்தது. ஹாலில் அமர்ந்து அப்பா ஏதோ படித்துக் கொண்டிருந்தார். அவளைப் பார்த்தவர் வியந்தார்.
குளிச்சியாம்மா?
ஆமாம்பா. தலை முழுகிட்டேன். சாப்பிடலாமா? பசிக்குது. பிரபு எங்க? இன்னும் வரலையா?
அவனும் கீதாவும் சினிமா போயிருக்காங்க வசு. வர நேரம்தான்.
கீதாவோட லெக்சரர் மிஸ்ஸ் மார்ட்டினை பார்த்தேம்பா. கீதா ரொம்ப குறும்பு பண்றதாவும். குரூப் சேர்த்துக்கிட்டு ஒரே லூட்டி அடிக்கறதாவும் கம்ப்ளெயிண்ட் பண்ணினா. அப்பாக்கிட்ட சொல்லி அவளை கண்டிக்கிறேன்னு சொன்னேன். அம்மா போனதுக்குப் பிறகு எங்க முணு பேரையும் வளர்க்கப் படாத பாடு பட்டீங்க. ஆனா ஒருத்தராலயும் உங்களுக்கு சந்தோஷமில்லை, இல்லப்பா?
அப்படின்னு யார் சொன்னா?
சொல்லணுமா? என்னால என்ன சந்தோஷம் சொல்லுங்களேன். அடுத்தடுத்து கஷ்டம்தானே. இன்னும் ஒரே வருஷம்தாம்பா. நா டாக்டராயிடுவேன். அதுக்கப்பறம் என்னால நிச்சயம் உங்களுக்கு கஷ்டமிருக்காது. அதுக்கப்பறம் பிரபுவையும், கீதாவையும் நல்லபடி முன்னேற்ற வேண்டிய பொறுப்பு என்னோடதுதான். உங்களை நிம்மதியா உக்கார வெச்சு நான் சந்தோஷப்படப் போறேன்.
சிவப்பிரகாசம் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அவள் பேசியதில் இருந்து அவருக்கு ஒரே ஒரு விஷயம் புரிந்தது. எந்தக் காரணம் கொண்டும் எனக்கு கல்யாணம் பண்ணிவைக்க மட்டும் முயலாதே என்கிறாள் பெண். அவருக்கு சிரிப்பதா, அழுவதா