Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnodu Oru Kana
Unnodu Oru Kana
Unnodu Oru Kana
Ebook107 pages40 minutes

Unnodu Oru Kana

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114203134
Unnodu Oru Kana

Read more from Hamsa Dhanagopal

Related to Unnodu Oru Kana

Related ebooks

Reviews for Unnodu Oru Kana

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnodu Oru Kana - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    உன்னோடு ஒரு கனா

    Unnodu Oru Kana

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    மாடியில் அங்கும் இங்குமாய், பிணைக்கப்பட்ட சிங்கமாய் அலை மோதுகிறாள் மேகலா. பால்கனியில் நின்று பங்களாவின் இரும்பு கேட் கூர்க்காவைப் பார்க்கிறாள். அவன் கடமை உணர்வில் எரிச்சலடைகிறாள்.

    இந்த அம்மாவை ஏமாற்ற முடியாதா? அவளுக்குத் தெரியாமல் இவள் மூச்சு கூட விட முடியாதா?

    பாவம் வாணி. இவள் வருவாள் என்று அலுவலகம் போகாமல் அந்தச் சின்ன வீட்டில் வழி பார்த்து விழி சோர்ந்திருப்பாள்.

    தொலைபேசி குயிலாய் இவளை அழைக்கிறது.

    ஹலோ! மேகலா ஹியர்.

    அமிர்தம் பேசறேன் மேகலா. வெளியே போற உத்தேசம் இருக்கா?

    எதுக்கு மம்மி இப்படி கேட்கறீங்க?

    காலைல உன் பரபரப்பு அப்படி சொல்லிச்சு. அம்மா சி.பி.ஐ.யில் இருக்க வேண்டியவள்.

    இல்லம்மா. சும்மா ஸ்மார்ட்டா டிரஸ் செய்துட்டேன்.

    இப்ப என் பி.ஏ.வுக்கான இன்டர்வியூ நடந்திட்டிருக்கு. மத்தியானம் வீட்டுக்கு வந்திருவேன்.

    'மம்மி, ஹோட்டல் கன்னிமாரால ஏதோ எக்ஸ் போர்ட் இம்போர்ட் மீட்டிங் இருந்ததா சொன்னீங்களே."

    அது கேன்ஸலாயிடுச்சு. உன்னோடத்தான் சாப்பிடப் போறேன்.

    மம்மி, என்னை உங்க பி.ஏ.வாக அப்பாயிண்ட் செய்துக்கங்களேன். பி.ஏ. படிச்சுட்டு மேலே படிக்கவும் போகாம, வெளியே சுத்தவும் முடியாம அடைபட்டிருக்கிறது கஷ்டமா இருக்கு மம்மி.

    நான் இப்ப பிஸி. இது பேசற நேரமா?

    தொலைபேசி துண்டிக்கப்படுகிறது.

    சே... அம்மாவா? ஜெயில் வார்டனா? எந்தக் குற்றமும் செய்யாத போதே இவளை வீட்டுச் சிறைக் கைதியாய் சங்கிலி பிணைக்கப்படாத கொலைக் குற்றவாளியாய்....

    அம்மாவிற்கு எப்படி இந்தப் புத்தி வந்தது? வழக்கம் போல் விடை கிடைக்கவில்லை. கொட்டும் அருவிக்கு யாரேனும் சிறைக் கம்பிகள் போடுவார்களா?

    அம்மா தன் வியாபார வளாகத்திலிருந்து வீடு திரும்ப இன்னும் மூன்று மணி நான்கு மணி நேரம் இருக்கிறது. அது வரை இப்படி அடைபட்டிருக்க இவளுக்கு என்ன தலையெழுத்து?

    மாடியிலிருந்து கீழே இறங்கிச் சமையலறைப் பக்கம் போகிறாள் மேகலா.

    வேலைக்காரியும் சமையற்காரம்மாளும் மும்முரமாய் சமையலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவள் பிரசன்னத்தில் கலைந்து போகிறார்கள்.

    என்ன சின்னம்மா, முந்திரி, காப்பி ஏதாவது வேணுமா?

    ஒண்ணும் வேணாம். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. தூங்கப் போறேன். அம்மா வந்தாகூட எழுப்பாதே. நானே வந்து சாப்பிட்டுக்கறேன்.

    சரி கண்ணு. நீ போய் படுத்துக்க. வேலைக்காரி உரிமையுடன் சிரிக்கிறாள்.

    அவர்கள் முன் சோர்வாய்க் கொட்டாவி விட்டபடி நடந்த மேகலா, படிகளில் ஏறியதும் ஒரே ஓட்டமாய் ஏறுகிறாள்.

    தன் அறைக்குள் நுழைந்ததும் கூந்தலை பிரஷ் செய்து உச்சந் தலையில் சின்னக் கொண்டையிடுகிறாள். முன்னும் பின்னும் நின்று பார்த்து தன் அழகைத் தானே ரசிக்கிறாள்.

    வெள்ளைச் சூரிதாரில் ஊதா ஜரிகை வேலைப்பாடுகள் உடை அவளுக்கு மிகப் பொருத்தமாய் இருக்க, காதுகளில் முத்துத் தொங்கல்கள், கழுத்தை இறுக்கிய முத்து நெக்லஸ், முடியை காதுகள் தெரியும்படி சரி செய்து... வானில் பறக்கும் தேவதை தடம் மாறி இங்கே நுழைந்ததைப் போல ஒரு தேவ அழகு. அதனால் தான் அம்மா இவளைப் பொன்னால் வைரமாய்ப் பாதுகாக்கிறாளோ?

    கட்டிலில் நீளமாய் நான்கு தலையணைகள் வைத்துப் போர்த்தி விடுகிறாள். ஹேண்ட் பேக்கில் நிறையப் பணம் எடுத்துத் திணிக்கிறாள். குதிஉயர் செருப்புக்களை எடுத்துக்கொண்டு அறைக்கு வெளி வருகிறாள்.

    கதவின் துவாரத்தில் சாவி நுழைத்துப் பூட்டுகிறாள். சாவித் துவாரத்தில் பார்த்தால் உள்ளே தாளிட்டு இவள் படுத்திருப்பதாய்த் தோன்றும்.

    பங்களாவின் முன்புறம் வந்து கூர்க்கா ஏமாந்த நேரம் தோட்டத்தின் பின்புறம் போகிறாள்.

    தோட்டத்தில் மாமரம் காம்பவுண்ட் சுவருடன் கை குலுக்கிச் சிநேகிதம் செய்து கொண்டிருக்கிறது.

    குதிஉயர் செருப்புக்களை எடுத்துக் காம்பவுண்டிற்கு வெளியே எறிவோமா என நினைக்கிறாள். சத்தம் வரும். கூர்க்கா ஓடி வரலாம். அல்லது சாலையில் போகும் நபர்களின் பார்வையில் படலாம். வீண் வம்பு.

    இரண்டு செருப்புக்களையும் நூலில் பிணைத்து தோளில் போட்டுக் கொள்கிறாள். மறு விநாடி லாவகமாய் மரம் ஏறுகிறாள். கிளைவிட்டுப் படர்ந்திருக்கும் மாமரம் இவளை உள்வாங்கி மறைத்துக் கொள்கிறது.

    மெல்ல வரும் பூட்ஸ் ஒலியில் கலங்கி விடுகிறாள். வருவது கூர்க்காதான். தன் பெருத்த வயிற்றைத் தடவியபடி வருகிறான் கூர்க்கா.

    சத்தம் கேட்டு வந்திருப்பானோ? மூச்சை இழுத்துப் பிடித்த படி குசலம் விசாரிக்கும் கட்டெறும்புகளைப் பொறுத்துக்கொண்டு கிளையோடு கிளையாய் உட்காருகிறாள் மேகலா. அவன் அண்ணாந்து பார்த்தால்... அவ்வளவுதான்.

    கூர்க்கா அந்த இடத்தைக் கடந்து போகிறான். தோட்டத்துப் பின்புறம் குளியலறைக் கதவு திறந்து மூடும் ஒலியில் இவள் நன்றாய் மூச்சு இழுத்து மூடுகிறாள். இப்படியே குதித்துக் கையில் பிடித்த செருப்புடன் கேட் வரை ஓட முடியாது. அவன் அதற்குள் வந்துவிடலாம். பார்த்து விடுவான். அம்மா வந்ததும் வராததுமாய்ச் சொல்லி விடுவான்.

    அது

    Enjoying the preview?
    Page 1 of 1