Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yuttha Boomi
Yuttha Boomi
Yuttha Boomi
Ebook137 pages47 minutes

Yuttha Boomi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Yuttha Boomi

Read more from Rajeshkumar

Related to Yuttha Boomi

Related ebooks

Related categories

Reviews for Yuttha Boomi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yuttha Boomi - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    விஷ்ணு சந்தோஷத்தில் திணறினான்.

    அவனுக்கு வலது பக்கமும் இடது பக்கமும் ரோஜா நிறத்தோடு இரண்டு கல்லூரி மாணவிகள்.

    விஷ்ணு...! ஐ... லவ்... யூ... ஒருத்தி அவன் கன்னத்தில் தன் அழகான மூக்கை வைத்து பெப்பர்மிண்ட் வாசனையோடு தேய்த்துக் கொண்டே சிணுங்க - இன்னொருத்தி அவனுடைய மார்புச் சட்டைக்குள் தன் வெண்டை பிஞ்சு விரல்களை நுழைத்து தடவியபடியே ஐ...லவ்...யூ... விஷ்ணு... என்றாள்.

    விஷ்ணு இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்தான்.

    'எவளை காதலிக்கலாம்...?'

    இரண்டு பேரும் பிரம்மனின் ஸ்பெஷல் தயாரிப்புகள் போன்று தெரிந்தார்கள்.

    ஹி... ஹி... ரெண்டு பேருமே ரொம்ப அழகாயிருக்கீங்க... எனக்கு யாரை செலக்ட் பண்றதுன்னே தெரியலை... நான் குழம்பிப் போயிருக்கேன்...

    அப்படீன்னா ஒரு காரியம் பண்ணுங்க விஷ்ணு...!

    என்ன...?

    எங்க ரெண்டு பேரையுமே லவ் பண்ணுங்களேன்...

    என்னது... ரெண்டு பேரையும் லவ் பண்றதா...? நான் ஏக பத்தினி விரதன். உங்க ரெண்டு பேர்ல ஒருத்தியைத்தான் காதலிக்க முடியும்.

    அப்படீன்னா ஒரு போட்டி வெச்சு எங்க ரெண்டு பேர்ல ஒருத்தியை செலக்ட் பண்ணுங்க...

    போட்டியா...?

    ம்...

    'என்ன போட்டி வைக்கிறது...?" விஷ்ணு தன் பின் - மண்டையைத் தட்டிக் கொண்டு யோசிக்க, ஒருத்தி சொன்னாள்.

    நான் சொல்லட்டுமா...?

    சொல்லு...

    நாங்க ரெண்டு பேரும் நீ... ள... மா... ஆளுக்கொரு முத்தம் தர்றோம். யார் தர்ற முத்தம் உங்களுக்குப் புடிச்சிருக்கோ... அவங்களை நீங்க செலக் பண்ணிக் காதலிக்கலாம்.

    ஆஹா... திவ்யமோ திவ்யம்... ஒருத்திக்கு இடது கன்னத்தையும் இன்னொருத்திக்கு வலது கன்னத்தையும் காட்டியபடி கண்களை மூடிக் கொண்டான்... விஷ்ணு.

    ட்ரிங்க்க்... ட்ரிங்க்க்...

    டெலிஃபோனின் அலறல் சத்தம் - போர்வைக்குள் இருந்த விண்ணுவை உசுப்ப - கனவில் வந்த கல்லூரி பெண்களிடம் முத்தத்தை வாங்கிக் கொள்ளாமலே - போர்வையை விலக்கியபடி எழுந்து உட்கார்ந்தான் விஷ்ணு.

    டெலிஃபோனை எரிச்சலாய் பார்த்தான்.

    என் கனவைக் கலைத்த கரும் பிசாசே...! வாய்விட்டுத் திட்டிக் கொண்டே எழுந்து போய் ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தான், விஷ்ணு டைம் பீஸில் ஆறுமணி.

    ஹலோ...

    யாரு... விஷ்ணுவா...? மறுமுனையில் கோகுல்நாத்தின் குரல்.

    குட்மானிங் அங்கிள்...

    என்ன விஷ்ணு... தூங்கிட்டிருந்தியா...?

    இல்ல அங்கிள்... அஞ்சரை மணிக்கே எந்திரிச்சு பாடியை பில்ட்-அப் பண்றதுக்காக... லேசா எக்சர்சைஸ் பண்ணிட்டிருந்தேன்...

    ஏண்டா... காலங்கார்த்தால் பொய் பேசறே...?

    பொய்யா...? அதுவும் என் வாயிலிருந்தா...? அபச்சாரம்... அபச்சாரம்...

    உன்னைப் பத்தி எனக்குத் தெரியுண்டா உத்தம புத்திரா...! சரி சரி... பல்லைத் தேய்ச்சு... ஒரு காப்பியை விழுங்கிட்டு உடனே புறப்பட்டு வா...

    எங்கே... அங்கிள்...?

    சாந்தோம் பீச்சுக்கு...

    சந்தோம் பீச்சுக்கா...? எதுக்கு அங்கிள்...?

    வா... சொல்றேன்... சொல்லிவிட்டு கோகுல்நாத் ரிஸீவரை வைத்துவிட விஷ்ணுவின் கண்களில் மிச்சம் இருந்த தூக்கக் கலக்கமும் சட்டென்று காணாமல் போயிற்று. கனவில் பார்த்த கல்லூரி மாணவிகளை மனசிலிருந்து உதறிவிட்டு வேகவேகமாய்க் குளியலறைக்குள் நுழைந்தான்.

    பத்தே நிமிஷம்!

    வெளியே வந்தான். ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் நின்று பேண்ட்டையும், சர்ட்டையும் மாட்டிக் கொண்டான். கண்ணாடியில் முகம் பார்த்து - தலை சீவி ஹீரோ ஹோண்டா சாவியைப் பொறுக்கிக் கொண்டு வாசலில் நின்றிருந்த பைக்குக்கு வந்தான். வீட்டைப் பூட்டிக் கொண்டதும் பைக்கில் பரவினான். எண்பதில் பறந்தான்.

    காலைச் சூரியன் தன் பீட் ரூட் நிற வெளிச்சத்தால் சென்னையை அலம்பிக் கொண்டிருந்தான். காற்றில் லேசாய் ஓஸோன் குளிர். விஷ்ணு யோசித்துக் கொண்டே பைக்கை விரட்டினான்.

    'கோகுல்நாத் எதற்காக கூப்பிட்டிருப்பார்...?'

    'கடற்கரையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமா?'

    'விஷயம் பெரிதாக இல்லாத பட்சத்தில் அங்கிள் கூப்பிடமாட்டாரே...?'

    சில நிமிஷ பயணத்திலேயே சாந்தோம் வந்தது. பிளாட்பாரத்தில் நிறைய பேர் கேன்வாஸ் அணிந்த கால்களோடு வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள். அதில் பாதிபேர் டாக்டரின் கட்டாயத்துக்காக நடப்பவர்கள். தொலைவில் சமுத்திர பெண், சூரியன் கொடுத்த தங்க நிற சேலையை அணிந்து அழகு பார்த்துக் கொண்டிருக்க - கடல் பறவைகள் தாழ்வாய்ப் பறந்தன.

    விஷ்ணு பைக்கை பேவ்மெண்ட் ஓரமாய் நிறுத்திவிட்டு இறங்க - ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்த கோகுல்நாத் எழுந்து வந்தார்.

    யூனிஃபார்மை தவிர்த்திருந்தார்.

    வெள்ளை வேஷ்டி, வெள்ளை சர்ட். மீசையின் அளவை குறைத்திருந்தார். கையில் ஒரு தமிழ் தினசரி.

    விஷ்ணு கேட்டான்.

    என்ன அங்கிள்... எதுக்காக ஃபோன் பண்ணி வரச் சொன்னீங்க...?

    வா நடந்துக்கிட்டே பேசுவோம்...

    பேவ்மெண்டில் மெல்ல நடந்தார்கள். ஜாக்கிங் ட்ரஸ்ஸில் குதித்துக் கொண்டு போன ஒரு பெண்ணை விஷ்ணு திரும்பிப் பார்க்க கோகுல்நாத் டே...ய்...ய்... என்றார்.

    "ஸாரி... அங்கிள்...

    Enjoying the preview?
    Page 1 of 1