Anda di halaman 1dari 8

குரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8 நள்ளிரவு) 1.

09 மணிக்கு, மீ னராசியில் இருந்து மேஷராசிக்கு


பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார். 

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

ஒழுக்கத்தை விருப்பமுடன் பின்பற்றி வாழும் கடகராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு பிணி, விவகாரம், பிதா, பாக்ய ஸ்தான அதிபதியாகிய குருபகவான் மீ னத்தில் இருந்து
பத்தாம் இடமாகிய மேஷத்தில் அமர்வு பெற்றுள்ளார். "பத்தில் குரு பதவிக்கு இடர்' என்பது ஜோதிட
பழமொழி. குருபகவான் தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் தன, குடும்ப, வடு,
ீ வாகன, பிணி, வில்லங்க
ஸ்தானங்களைப் பார்க்கிறார். இதனால் சிரம பலன்கள் குறைந்து நன்மை ஏற்படும். மனதை
ஒருநிலைப்படுத்தி செயல்படுவதால் செயல்பாடு களில் ஓரளவு வெற்றி கிடைக்கும். பணவரவு
குறையலாம் என்பதால், கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி பலன் பெறலாம்.
பேச்சில் சாந்தமும் சத்தியத்தை பின்பற்றும் குணமும் நிறைந்திருக்கும். தம்பி, தங்கைகளுடன் குடும்ப
விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தாயின் ஆசியும், தாய்வழி உறவினரால் நன்மையும்
ஏற்படும். வடு,
ீ வாகன வகையில் திருப்திகரமான பலன் தற்போதைய நிலையில் தொடரும். புத்திரர்கள்
தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு உங்களை நிர்ப்பந்தம் செய்வர். அவர்களிடம்
பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.
பூர்வ சொத்தில் நம்பிக்கை குறைவான நபர்களை பணியில் அமர்த்தக்கூடாது. வடு
ீ வாடகைக்கு
விடுவோர் மிக கவனமாக ஆட்களை குடியமர்த்த வேண்டும். உடல்நலக்குறைவு நீங்கி உற்சாகம்
பெறுவர்கள்.
ீ வழக்கு விவகாரத்தில் இருந்த தொல்லை குறையும். கணவன், மனைவி இடையே கருத்து
வேறுபாடு வரலாம் என்பதால், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்வது நல்லது.
நண்பர்களின் செயல்பாடுகளில் குற்றம் சொல்வது, அளவுக்கு மீ றி பணபரிவர்த்தனை செய்வது பிரிவைத்
தரும். கவனம்.
சங்கங்களில் பொறுப்பான பதவியை பெற்றவர்கள், பதவிப்பொறுப்பில் இருந்து விடுபட விரும்புவர்.
தந்தைவழி சொத்தின் பலன் ஓரளவு கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், மருத்துவமனை, ஓட்டல், டிராவல்ஸ், குளிர்பானம், லாட்ஜ், கல்வி, நிதி
நிறுவனம் நடத்துவோர், கடல்சார் பொருட்கள், வாசனை திரவியம், எண்ணெய், கட்டுமானப் பொருள்,
டெக்ஸ்டைல்ஸ், காகிதம், தோல், மெட்டல் தொடர்பான தொழில் செய்பவர்கள் உற்பத்தியை
பெருக்குவதிலும் நிர்வாக நடைமுறையை பராமரிப்பதிலும் சில குறுக்கீ டுகளைச் சந்திக்கலாம். போட்டி
அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். மற்ற தொழில் செய்பவர்கள் ஓரளவுக்கு ஆர்டர் பெறுவார்கள்.
பணவரவு திருப்திகரமாகும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆர்வமுடன்
பணிபுரிவதால் மட்டுமே குளறுபடி வராத தன்மை இருக்கும். சிலர் நிர்வாகத்தின் கண்டிப்புக்கு உட்படுவர்.
அரியர்ஸ் தொகை கிடைக்கும். சகபணியாளர்கள் நல்ல எண்ணத்துடன் அணுகும் சூழ்நிலை உருவாகும்.
பணபரிவர்த்தனை செய்கிற பணியில் உள்ளவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, குளிர்பானம், மருந்து, மினரல் வாட்டர், வாசனை திரவியம்,
கட்டுமானப்பொருள், பாத்திரம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கண்ணாடி, தோல்,
பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரிகள் போட்டியை சமாளிக்க
போராடுவர். விற்பனை ஓரளவுக்கு இருக்கும். லாபம் சுமார் நிலை. கூட்டு வியாபாரம் செய்பவர்கள்
ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்வதில் குளறுபடி ஏற்படலாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணிச்சுமைக்கு உட்படுவர். நிர்வாகத்தின் வழிகாட்டுதலை தகுந்த
முறையில் பின்பற்றுவதால் மட்டுமே நற்பெயர் பெறலாம். சலுகைகள் கிடைக்க பொறுமை காப்பது
அவசியம். குடும்பப் பெண்கள் கணவரின் சிரமங்களை சரிசெய்ய இயன்ற வகையில் உதவுவர். தாய்வட்டு

சீர்முறை எதிர்பார்த்தபடி கிடைக்கும். வட்டுச்செலவுக்கு
ீ வரவும் செலவும் சரியென செல்லும்.
சுயதொழில் புரிபவர்கள் வாடிக்கையாளர்களை தக்கவைப்பதில் கவனம் கொள்வது அவசியம். உற்பத்தி,
விற்பனை சுமாராக இருக்கும்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், கேட்டரிங், இதழியல், கம்ப்யூட்டர், ஓட்டல்
மேனேஜ்மென்ட், ஆசிரியர் பயிற்சி, வங்கியியல், வணிகவியல், ரசாயனம், பவுதிகத்துறை மாணவர்கள்
மனதில் இருந்த குழப்பம் விலகி மிகுந்த கருத்துடன் செயல்படுவர். மற்ற துறை மாணவர்களுக்கும்
படிப்பில் கவனம் அதிகரிக்கும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தரத்தேர்ச்சியும் நற்பெயரும்
பெறுவார்கள். சக மாணவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சரியாகும். படிப்புக்கான பணவசதி
திருப்திகரமாக கிடைக்கும். தாய்வழி உறவினர் விரும்பி உபசரிப்பர். பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு
வேலைவாய்ப்பில் ஓரளவு அனுகூலம் உண்டு.
அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயரை தக்கவைப்பதில் கவனம் கொள்வர்கள்.
ீ அரசு
தொடர்பான காரியம் நிறைவேறுவதில் அனுகூலம் வளரும். எதிரிகளும் அனுகூலத்துடடன்
நடந்துகொள்வர். தாய்வழி உறவினர்கள் இயன்ற உதவிபுரிவர். வழக்கு விவகாரங்களில் அனுகூலத் தீர்வு
கிடைக்கும். அரசியல் பணிக்கு உதவுவதில் புத்திரர்கள் தயக்கம் கொள்வர்.
விவசாயிகள்: ஓரளவு மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் உபரி பணவரவு உண்டு. நிலம்
தொடர்பான விவகாரங்களில் சாதகத்தீர்வு ஏற்படும். புதிய நிலம் வாங்குவதில் நிதான நடவடிக்கை
அவசியம்.

பாட வேண்டிய பாடல்


வாள்நுதற் கண்ணியை
விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சி
பேணுதற்கு எண்ணிய
எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத
கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ
முன்செய் புண்ணியமே!

பரிகாரம்
அபிராமி அன்னையை வழிபடுவதால் மனக்கஷ்டம், பணநஷ்டம் வராத நன்னிலை பெறலாம்.
திருக்கடையூர் சென்று அபிராமியை வழிபட்டு வாருங்கள்.

கடகம் 
(புனர்பூசம் 4 வது பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீ னம்
கடக ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 4-வதாக வரும் கடகம் பெண் ராசியாகும். ஜோதிட உலகின்
ராணி என்று அழைக்கப்படும் சந்திரனுக்கு உரிய வடு
ீ கடகம். இது சத்துவ குணம் பொருந்திய ஜல
ராசியாகும். கடகத்தை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள் கவர்ச்சியான உருவமும்,
இளகிய மனமும் படைத்தவர்கள். நல்ல கற்பனை சக்தியும், உடையவர்கள். மேலும் சாதாரண
விஷயங்களுக்குக்கூட எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். மற்றவர்களிடம் அன்பும், பாசத்துடனும்
இருக்கும் இவர்கள் மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். நீர்நிலை
சார்ந்த தொழில்களால் இவர்களுக்கு அதிக லாபம் உண்டு. கடகத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-
சந்திரன். அதிர்ஷ்ட மலர்-வெள்ளை அல்லி, அதிர்ஷ்டக் கல்-முத்து. அதிர்ஷ்ட நிறம்-வெண்ணிறம்.
அதிர்ஷ்ட திசை-வடமேற்கு. அதிர்ஷ்ட எண்-2. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம்-பார்வதி.
கடக ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: புனர்பூசம் 4 ம் பாதம், பூசம் 1, 2, 3, 4 பாதங்கள் மற்றும்
ஆயில்யம் 1, 2, 3, 4 பாதங்கள். புனர்பூசம் 4 ம் பாதத்தில் பிறந்தவர்கள் நல்ல குணம் உள்ளவர்களாக
இருப்பார்கள். பிறரின் குறிப்பறிந்து நடப்பர். தெளிவான சிந்தனையும், சிறப்பான செயலாற்றலும்
உடையவர். சிறந்த பேச்சாற்றல் இவர்களிடம் உண்டு. பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தெசையே ஆரம்ப தெசையாகும். இந்த நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் கலை ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். பெற்றோரை அதிகம் நேசிக்கும் குணம்
உண்டு. கடவுள் பக்தி மிகுந்தவர்கள். பசி தாங்க மாட்டார்கள். பூசம் முதல் பாதத்தில்
பிறந்தவர்களுக்கு தயாள குணம் உண்டு. மதி நுட்பம் கொண்ட இவர்கள் பெரியோரிடம் மரியாதை
உடையவர்கள். இவர்களுக்கு அமைதியான வாழ்க்கைத் துணை அமையும். அடிக்கடி வயிற்று
வலியால் வருந்துவார்கள். இவர்களிடம் செல்வம் வேகமாக வந்து சேரும். 2 ம் பாதத்தில்
பிறந்தவர்கள் எதையும் நிதானமாக செய்யும் இயல்புடைவர்கள். மற்றவர்களுடன் சில சமயம்
சண்டையிடும் குணம் இருந்தாலும், இவர்களிடம் இரக்க குணம் நிறைந்திருக்கும். பிறருக்கு நல்ல
ஆலோசனைகளை வழங்குவதில் வல்லவராக விளங்குவார்கள். 3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு
நல்ல அறிவுக் கூர்மை உண்டு. எப்பொழுதும் நல்லதையே யோசிக்கும் இவர்கள் எடுத்த காரியத்தில்
வெற்றி பெறும் வரை ஓய மாட்டார்கள். எவ்வளவு பெரிய விஷயமாயினும் அதற்கு சஞ்சலப்பட
மாட்டார்கள். 4 ம் பாதத்தில் பிறந்தவர்கள் விஷயங்களை விரைவாகவும் வேகமாகவும்
புரிந்துக்கொள்ளும் தன்மை உடைய இவர்களுக்கு அடிக்கடி சளித் தொந்தரவுகள் உண்டாகும்.
திட்டமிட்டு செயலாற்றும் இவர்கள் உலகியல் விஷயங்களில் அதிக நாட்டம் உடையவராக
இருப்பார்கள். எந்த விஷயத்திலும், ஆழ்ந்து சிந்தித்த பிறகே இறங்குவார்கள். மேலும்
எடுத்துக்கொண்ட வேலை முடியும் வரை எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். பூசம்
நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- பூராடம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு
சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பூசம், பரணி, பூரம், அனுஷம், பூராடம்,
உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-கருங்குவளை. அனுகூல தெய்வம்-எமன். அதிர்ஷ்டக் கல்-நீலம்.
அதிர்ஷ்ட நிறம்-கறுப்பு. அதிர்ஷ்ட எண்-8 ஆயில்யம்; இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த
நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை புதன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
தைரியம் மிக்கவர்கள். பேச்சுவன்மையும், எதிரிகளையும் வெல்லும் திறன் உடைய இவர்கள்
பணத்தை செலவழிக்கத் தயங்கமாட்டார்கள். ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு
வேதை(ஆகாதது)- மூலம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத
நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி. அதிர்ஷ்ட மலர்-
வெண்காந்தள். அனுகூல தெய்வம்-மகாவிஷ்ணு, பெருமாள். அதிர்ஷ்டக் கல்-மரகதம். அதிர்ஷ்ட
நிறம்-பச்சை. அதிர்ஷ்ட எண்-9. ஆயில்யம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் யாவரையும்
தன்வசமாக்கிக் கொள்ளும் அற்புத சக்தியுடையவர்கள். அன்பும், தயவும் தர்ம
சிந்தனையுமுடையவர். தளரா ஊக்கமுடையவர். தம் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாய்,
உறுதியான நெறியுடன் ஈடுபடுவார்கள். ஆயில்யம் 2 ம் பாதத்தில் பிறந்தவர்கள் தோல்வியைக்
கண்டு மனத்தளர்ச்சியடைந்தாலும், மீ ண்டும் புதிய உத்வேகத்துடன் வேலை செய்வார்கள். இளகிய
உள்ளம் படைத்தவராகையால், பிறர் இவரை எளிதில் ஏமாற்றி விட வாய்ப்புண்டு. ஆயில்யம் 3 ம்
பாதத்தில் பிறந்தவர்களுக்கு பரந்த மனம் உண்டு. உறவினர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும்
அதிகப் பற்றுதல் உடையவர்கள். பிறருடைய கஷ்டத்தையும் கவலையையும் தம்முடையதாகப்
பாவித்திடுவார்கள். ஆயில்யம் 4 ம் பாதத்தில் பிறந்தவர்கள் குறுகிய காலத்தில் அதிக லாபத்தை
சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் உடையவர்கள். எதிர்த்தவர்களைத் தகர்த்திடும்
சாமர்த்தியமுடையவர்கள்.
பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீ ன
ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 8 ம் இடத்திலிருந்து கொண்டு பல
அலைச்சல்களை தந்த குரு பகவான் 21.11.2010 முதல் உங்களின் ராசியிலிருந்து 9 ம் இடத்துக்கு
மாறுகிறார். தேவையில்லாமல் தொந்தரவு கொடுத்த எதிரிகள் அடங்கிக்கிடப்பார்கள். கொடுக்கல்-
வாங்கல் வகையில் இருந்து வந்த சிக்கல்கள் தானே விலகும். வட்டை
ீ விட்டுப்பிரிந்து வெளியூரில்
இருந்தவர்களுக்கு குடும்பத்தோடு மீ ண்டும் இணைந்து கொள்ளும் வாய்ப்புக்கள் வந்து சேரும்.
எவ்வளவு முயற்சிகள் செய்தும் இது நாள் வரை வேலை கிடைக்கவில்லையே என்று
வருந்தியவர்கள் நல்ல வேலையில் அமர்வார்கள். குடும்பத்தில் வரவுக்கு மீ றிய செலவு என்ற
நிலை மாறி பழையபடி அமைதி நிலவும். தடைப்பட்டுக் கொண்டே இருந்த சுப காரியங்கள் நல்ல
விதமாக நடைபெறுவதோடு அதற்கு உரிய பணமும் கையில் வந்து சேர குரு அருள் புரிவார்.
சாதனையாளர்களுக்கு திறமைக்கு உரிய பெருமை கிடைக்கவில்லையே என்ற நிலை இனி இராது.
நல்ல விதமாகத் தொழில் தொடங்க வேண்டும். அதில் முன்னேற வேண்டும் என்று முயற்சி
செய்பவர்களுக்கு தகுந்த நேரத்தில் உதவியும், வழி காட்டுதலும் வந்து சேரும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் விலகி, குதூகலம் குடியேறும். திருமண
வாழ்வை எதிர்பார்ப்பவர்களுக்கு, குருவின் அருளால் மணப்பேறு கிட்டும். பழைய நட்பை சந்தித்து
மகிழும் வாய்ப்பு உண்டாகும். அனைவரிடமும் அனுசரித்துச் சென்று, உங்களின் காரியங்களை
அனுகூலமாக்கிக் கொள்வர்கள்.
ீ நூதனப் பொருட்களின் சேர்க்கையால் இல்லம் பொலிவாய்
திகழும். பொது வாழ்வில் உங்களின் ஈடுபாடு சிறப்பாய் இருக்கும். ஆரோக்கியத்தில் இதுவரை
இருந்த நலிவு நீங்கி, புதுத்தெம்புடன் வளைய வருவர்கள்.
ீ தாய்வழி உறவுகள் உங்களின்
முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவார்கள்.
மாணவர்களுக்கு: குரு தரும் அருளால் மறதியால் ஏற்பட்டத் தொல்லைகள் விலகி படிப்பில்
ஆர்வம் கூடும். ஆசிரியர்கள் அளிக்கும் ஆதரவு உங்கள் கற்பனை எல்லைகளை விரிவடையச்
செய்யும். கல்வித் தொடர்பான இதர துறைகளிலும் உங்கள் திறமையும், சாமர்த்தியமும் பளிச்சிடும்.
கல்விக்கடன் பெற எடுக்கும் முயற்சி பலிதமாகும் வாய்ப்பிருந்தால், விரும்பிய பாடத்துறையில்
மகிழ்வுடன் சேர முடியும். தொழில்கல்வி படிப்பவர்கள் சிறப்பான நிலையை அடைவார்கள்.
சுற்றுலா, விழா ஆகியவற்றில் கலந்து கொண்டு சுவையான உணவு வகைகளை உண்டு மகிழும்
வாய்ப்பு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: சாதகமான குரு உங்கள் கடமைக்குரிய பலனை வெற்றிக்கனியாக்கி
கையில் தருவார். மேலும் உங்கள் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வாய்ப்புகளைத்
தருவதால், அலுவலக விழா, போட்டி ஆகியவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். கணினித்
துறையில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகையுடன் பாராட்டும் வந்து சேரும். உங்கள் மனதில்
இருந்த தாழ்வு மனப்பான்மை விலகி, தன்னம்பிக்கை அதிகரிக்கும். எவ்வளவு பாராட்டும் உயர்வு
இல்லையே என்று வருந்தியவர் மனம் குளிரும் வண்ணம் முடக்கி வைக்கப்பட்டிருந்த பதவி
உயர்வையும் அதற்கான பொருளாதார உயர்வையும் சேர்த்து வழங்குவார் குருபகவான்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு: நீங்கள் இதுவரை சந்தித்த மன உளைச்சல், நெருக்கடியான
சூழ்நிலை ஆகியவை மாறி இணக்கமான சூழல் உருவாக குரு உங்கள் பக்கபலமாக இருப்பார்.
பிறருக்கு சிக்கலாக தோன்றும் பணியை சடுதியில் முடிக்கும் திறன் கூடும். உங்களின் திறமையை
குறைத்து எடை போட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக உங்கள் செயல்கள் இருக்கும்.
பிரயாணங்களின் மூலம் புதிய நட்பு கிட்டும். பைசலாகாமல் இருந்த வழக்கு விவகாரங்கள்
சாதகமாக முடிந்துவிடும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கும்.
உங்கள் திறமைக்கு ஏற்ற பெருமை கிடைக்கும்படி செய்வார் குரு.
வியாபாரிகளுக்கு: அச்சகம், வண்டி வாகனங்களை வாங்கி விற்பவர்கள், எழுது பொருட்கள்
விற்பவர்கள் ஆகியவர்கள் சந்தித்த நெருக்கடியான சூழல் மாறி மீ ண்டும் வியாபாரம் பழைய
நிலைக்கு வர குரு பகவான் கை கொடுப்பார். சிறு தொழில் புரிபவர்களும், வியாபாரிகளும்,
வியாபார நிலவரத்திற்கேற்றவாறு செயல்பாடுகளையும், திட்டங்களையும் மாற்றி அமைத்தால்,
கணிசமான லாபம் கிட்டும். வாடிக்கையாளர்களுக்கு குறித்த காலத்தில் பொருட்களைக் கொடுத்து
அவர்களின் நன்மதிப்பை சம்பாதித்துக் கொள்வர்கள்.
ீ பங்குத் தொகையில் முதலீடு செய்த தொகை
மூலம் வரும் லாபம் கணிசமாக இருக்கும். புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தி சாதனை
படைப்பீர்கள். உங்கள் கடின உழைப்பால் சவால்களை ஜெயிக்கும் வாய்ப்பை குரு நல்குவார்.
கலைஞர்களுக்கு: நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிக்கு ஊக்கமும், ஆக்கமும் தேடி வரும்.
போட்டியாளர்களை உங்கள் திறமையால் சுருட்டி விட முடியும். கையிருப்புத் தொகையினை
அசையாச் சொத்தாய் மாற்றும் வாய்ப்பு தானே கூடி வரும். சரளமான பண வரவால், பல
பிரச்சினைகள் தீர்ந்துவிடும். புதுப்பொறுப்புகள் மூலம் உங்கள் அந்தஸ்தும், கௌரவமும் உயரும்.
சக கலைஞர்களின் ஆலோசனையுடனும், ஒத்துழைப்புடனும் நிகழ்ச்சிகளில் புதிய மாற்றங்களை
புகுத்தி வரவேற்பையும், அதற்கேற்ற நல்ல பெயரையும் தக்க வைத்துக்கொள்வர்கள்.
ீ நட்புறவுகள்
வலுக்கும் விதத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விவசாயிகளுக்கு: கடன் வாங்கி கலங்கிய நிலை மாறும். விவசாயத்துறையில் லாபம் தரும்
உத்திகளைப் பயிலும் வாய்ப்பு கிடைக்கும். நில புலன்களை பராமரிக்கும் வகையில் இருந்த
சுணக்கங்கள் யாவும் நீங்கப்பெறுவதால், சுறுசுறுப்புடன் வேலைகளில் ஈடுபடுவர்கள்.
ீ தொழில்
உபகரணங்கள் வேண்டி அலைந்த நிலை இனி இருக்காது. நெல், கரும்பு, பழ வகைகள்
ஆகியவற்றின் மூலம் கணிசமான லாபம் கிட்டும். வங்கிகள் மூலம் கடன் பெற எடுத்த முயற்சிக்கு
நல்ல பலன் கிட்டும். ஒரு சிலர் விவசாயத்திற்கு என புதிய வாகனங்களும், அதிக மகசூல் தரும்
விதை வகைகளையும் வாங்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
பரிகாரங்கள்: வெள்ளிக்கிழமைகளில் திருமகளை வழிபட்டு, விளக்கேற்றிவர, எல்லா
முயற்சிகளிலும் தாமதமின்றி நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஞாயிற்றுக்கிழமை
பைரவரை வழிபட்டு வர, தொழில் வளம் சிறக்கும்.
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீ னம்
சிம்ம ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 5 வதாக வரும் இந்த ஆண்ராசியின் உருவம் சிம்மத்தைப்
போன்று இருக்கும். சிம்மத்தை தன் ராசியாகவும் லக்னமாகவும் கொண்டவர்கள் பெருந்தன்மை
உடையவர்களாகவும், வட்டமான முகத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதில்
எவருக்கும் அடிபணிய மாட்டார்கள். சிம்மத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-சூரியன், அதிர்ஷ்ட மலர்-
செந்தாமரை, அதிர்ஷ்டக் கல்-மாணிக்கம், அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு, அதிர்ஷ்ட திசை-கிழக்கு,
அதிர்ஷ்ட எண்-1. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம்-சிவபெருமான்.
சிம்ம ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: மகம் 1,2 3,4 பூரம் 1,2,3,4 பாதங்கள், உத்திரம் 1-ம்பாதம். மகம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி கேது ஆகும். இவர்களின் ஆரம்ப தெசை கேது
ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுநல நோக்கில் செயல்படுவார்கள்.
அதிக அளவில் பணம் செலவழிக்கும் சுபாவமுள்ளவர்கள். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை
(ஆகாதது)- ரேவதி நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத
நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி. அதிர்ஷ்ட மலர்-
செவ்வல்லி, அனுகூல தெய்வம்-இந்திரன், அதிர்ஷ்டக் கல்-வைடூரியம், அதிர்ஷ்ட நிறம்-கரும்
பச்சை. அதிர்ஷ்ட எண்-10. மகம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சுற்றுப்பயணம் செய்ய ஆர்வம்
உள்ளவர்கள். உறக்கம் அதிகம் கொள்ளாதவர்கள். தேவைக்கு மேல் அதிகமாக பணம் செலவு
செய்யும் இயல்பு உடையவர்கள். எளிதில் புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். இரண்டாம் பாதத்தில்
பிறந்தவர்கள் நற்பண்புகள் நிறைந்தவர்களாய் காணப்படுவார்கள். இவர்களுடைய தலை மற்றும்
முகம் பகுதியில் சில தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். வியாபாரத்துறையில் சிறந்து
விளங்குவார்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பலருக்கு உதவி செய்யும் குணம் உண்டு.
நியாயமாக நடந்து கொள்வார்கள். ஆனால் வம்பு சண்டை என்று வந்து விட்டால் வரிந்து கட்டிக்
கொண்டு கிளம்பி விடுவார்கள். இவர்களுக்கு கழுத்து வலி இருக்கும். நான்காம் பாதத்தில்
பிறந்தவர்கள் எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்வார்கள். இவர்கள் தங்களுடைய
கருத்துக்களை பகிரங்கமாக வெளியிடத் தயங்குவார்கள். பெண்கள் மற்றும் பெரியோர்களின்
வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சுக்ரன் ஆகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை சுக்ரன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் எப்பொழுதும் இனிமையாகப் பேசுவார்கள். சிவந்த உடலை உடையவர்களாக
இருப்பார்கள். பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- பூராடம் நட்சத்திரம். திருமணம்
செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 5. அவைகள் பரணி, பூசம், அனுஷம்,
பூராடம், உத்திராட்டாதி. அதிர்ஷ்ட மலர்-செந்தாமரை, அனுகூல தெய்வம்-சிவபெருமான்,
அதிர்ஷ்டக் கல்-வைரம், அதிர்ஷ்ட நிறம்-வெண் நீலம். அதிர்ஷ்ட எண்கள்-2, 11. பூரம் முதல்
பாதத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பு உடையவர்களாக இருப்பார்கள். கணிதம், விஞ்ஞானம்
ஆகியவற்றில் நல்ல மதி நுட்பம் இருக்கும். செல்வாக்கு உடையவராய் இருப்பார்கள். அடிக்கடி சளி,
இருமல் தொந்தரவுகளால் பாதிக்கப்படுவார்கள். 2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு,
செல்வ சேர்க்கை, கலைகளில் தேர்ச்சி, சொத்து சுகம் ஆகிய அனைத்தும் ஏற்படும். பெண்
குழந்தைகளால் அதிக நன்மை ஏற்படும் யோகம் உண்டு. இவர்கள் மறதி மற்றும் குழப்பத்தால் சில
தொல்லைகளை சந்திப்பார்கள். 3 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இல்லற வாழ்வில் சுப பலன்கள்
ஏற்படும். தாய்வழி உறவுகளின் ஆதரவும் அனுசரனையும் இருக்கும். பணவரவு இருந்தாலும்
அதற்கேற்ற செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட
வாய்ப்பும், லட்சுமி கடாட்சமும் ஏற்படும். வாகன வசதிகள், ஆடம்பர வாழ்க்கை, நல்ல சாப்பாடு
ஆகியவை குறைவின்றி கிட்டும். பண விஷயங்களில் கவனமாக இருக்க பிறரின் தூண்டுதல்
தேவைப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சூரியன். அவர்களின் ஆரம்ப
தெசை சூரியன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வசதியுடன் வாழும்
யோகம் உண்டாகும். இவர்களுக்கு சங்கீ தத்தில் ஈடுபாடு இருக்கும். உத்திரம்
நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- உத்திரட்டாதி நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில்
கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம்,
விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-செந்தாமரை, அனுகூல தெய்வம்-லக்ஷ்மி,
அதிர்ஷ்டக் கல்-வைரம், அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு, அதிர்ஷ்ட எண்-3, 12. உத்திரம் முதல் பாதத்தில்
பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் ஜ“வன வகையில் நற்பலன்கள் உண்டாகும். இந்த
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சொந்த ஊர் விட்டு வெளி ஊரில் தமது வாழ்கையை அமைத்துக்
கொள்வார்கள்.
பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21.11.2010 அன்று இரவு 10.54 மணி அளவில் மீ ன
ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 7-ல் இருந்து அருமையான பலனைத்தந்து
கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 8-ம் வட்டுக்கு
ீ மாறுவதால், தொழிலில் சில
மாற்றங்களையும், ஏமாற்றங்களையும் சந்திக்கும் நிலை உருவாகும். வட்டிலும்,
ீ வெளி
வட்டாரத்திலும் வார்த்தை அம்புகளை வசாமல்
ீ இருந்தால் நேசமும், பாசமும் மாறாமலிருக்கும்.
குழந்தைகளின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் தேவை. சொத்துக்களை வாங்கும் போதும் விற்கும்
போதும், வில்லங்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டால் உங்கள் ஆசைக் கனவுகள் விரைவில்
நனவாகும். முரண்பாடான கருத்துக்களுக்கு மனதில் இடம் கொடாமலிருந்தால், மன
உளைச்சலைத் தவிர்த்துவிடலாம். வெளியூர் பயணங்களில் புதியவர்களிடம் கவனமாகப் பழகுவது
நல்லது. குடும்ப ஒற்றுமை ஆட்டம் காணாமல் நிலையாய் இருப்பதற்கானத் தீர்வை உடன் கண்டு
கொண்டால், பிரச்சினைகளைத் திறம்பட சமாளிக்க முடியும். உங்களுக்கு ஏற்படும் தடைகளை
சவாலாக எடுத்துக் கொண்டால், எதிலும் வெற்றி பெறுவது உறுதி. புதிய திட்டங்களில் பரபரப்பைத்
தவிர்ப்பது அவசியம்.
பெண்களுக்கு: வண்
ீ செலவுகளைச் சுருக்குவதில் தனி கவனம் செலுத்தி வந்தால், வட்டு

செலவுகளைக் குறைவின்றி செய்ய இயலும். அண்டை வட்டு
ீ மனிதர்களால் சில பிரச்சினைகள்
உருவாகலாம். சிறிய விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்துக் கொண்டால்,
உற்சாகமாக இல்லப் பணிகளை செய்ய இயலும். கர்ப்பிணிப் பெண்கள் ஜ“ரணக் கோளாறுக்கு இடம்
தராதவாறு மிதமான உணவு வகைகளை உண்பது நல்லது. செல்லப் பிராணிகளால் சில
தொல்லைகள் உண்டாகும். எந்த சூழலிலும் வாக்குவாதத்தைத் தவிர்த்து பொறுமையைக்
கடைபிடித்தால், வரும் நன்மைகள் அதிகமாகும்.
மாணவர்களுக்கு: இரவு நேரம் அதிக தூரம் வாகனங்களில் செல்வதைக் குறைத்துக் கொள்வது
நல்லது. பதற்றம், மறதி-இரண்டையும் தவிர்த்து விட்டால், படிப்பில் உங்கள் மனதை
ஒருமுகப்படுத்தி வெற்றி பெற முடியும். நட்பு, வெளி வட்டாரம் ஆகியவற்றில் ஓர் எல்லைக்கோடு
இருப்பது அவசியம். படபடவென்று பேசுவதைக் குறைத்தால், பிறரின் கருத்துக்களை ஊன்றி
கவனிக்க இயலும். கேளிக்கைகளில் மனதை அலைபாயவிடாமல், கட்டுப்பாட்டுடன் இருந்தால்,
அதிக நன்மைகள் உங்கள் பக்கம் இருக்கும். உடனிருக்கும் நண்பர்களால், சிறு தொல்லைகளை
எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வியாபாரிகளுக்கு: அரசு தொடர்பான காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டியிருக்கும்.
சில நேரங்களில் பங்குதாரர்களிடையே அதிருப்தியும், முணுமுணுப்பும் தோன்றி மறையும். பணம்
கொடுக்கல் வாங்கலில் குளறுபடிகள் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சரக்குகளைப் பெறுவதும்,
விநியோகம் செய்வதும் எளிதாகும். வாடிக்கையாளர்களின் மனதையும், தேவையும் அறிந்த
பணியாளர்களை வேறு இடங்களுக்கு மாற்றாமலிருந்தால் வருகின்ற லாபம் ž ராக இருக்கும். சட்ட
பிரச்சினைகளில் உங்களின் தனிப்பட்ட கவனம் இருந்தால் நன்மைகளை உரிய காலத்தில் பெற
இயலும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: சிறிய உரசல்களைப் பொருட்படுத்தாமல் பெருந்தன்மையாய் நடந்துக்
கொண்டால், அனைவரும் உங்கள் பக்கமே! தளவாடங்கள் மற்றும் இரும்புப் பொருட்களைக்
கையாளுகையில் அதிக கவனம் தேவை. உங்கள் கௌரவத்தைக் கெடுக்க நினைப்பவர்களை
அருகில் அண்ட விடாதீர்கள். பொது இடங்களில் அதிகாரிகளைப் பற்றி விமர்சனங்களில் ஈடுபட
வேண்டாம். அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பிரயாணம் பணிகளில்
குறுக்கிடாமல் தகுந்த ஓய்வெடுத்த பின் வேலைகளைத் தொடர்வது நல்லது.
கலைஞர்களுக்கு: தரமறிந்து நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள். தொல்லை ஏதும் தோன்றாது.
ஒவ்வாத பழக்க வழக்கங்களுக்கு தலையாட்டாமலிருந்தால், வாழ்க்கை வண்டி ž ராக ஓடும். வடு

மராமத்து, பராமரிப்பு ஆகியவற்றில் நம்பகமானவர்களின் உதவியை நாடுவது அவசியம். உங்கள்
லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள மறைமுக வழிகளுக்கு மாறி விடாதீர்கள். லாபத்தைவிட
நஷ்டம்தான் கூடும். வேலை மும்முரத்தில் வேளைக்கு உணவு உண்ணும் பழக்கத்தை
கடைபிடிப்பதில் கவனமாய் இருந்தால், ஆரோக்கியம் குறையாமலிருக்கும்.
விவசாயிகளுக்கு: அரசு அளிக்கும் சலுகைகளைக் குறித்த காலத்தில் பெற்றுக் கொள்வது என்பது
சற்று சிரமத்திற்கு இடையே நிறைவேறும். சிக்கனம் செய்ய வேண்டிய நேரத்தில் திடீர் செலவுக்காக
அதிக பணம் புரட்ட வேண்டியிருக்கும். தொழில் ரீதியான விஷயங்களில் அக்கறையோடு நடந்துக்
கொண்டால் மட்டுமே லாபம் என்பது கையில் தங்கும். நிலத்தின் தன்மைக்கு ஏற்றப் பயிர்களைத்
தேர்ந்தெடுப்பது அவசியம். கடனாகப் பெறும் உபகரணங்களைப் பத்திரமாக வைப்பது மூலம்
வண்செலவுகளைத்
ீ தவிர்க்க முடியும். மேலும் போட்ட பணத்திற்கு ஏற்ற மகசூலையும் பெற
முடியும்.
பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: பிறர்க்கு உதவப் போய், அங்கும் இங்கும் அலைய நேரிடும்.
தேவைக்கேற்ற பணத்தைவிட அதிகம் செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டால்,
பொருளாதாரம் சிக்கலாகாமல் இருக்கும். வண்
ீ வம்பு விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி
இருங்கள். வழக்கமான பணிகள் தொய்வில்லாமல் நடந்தேறும். நேரடியாக அரசாங்கத் தொடர்பு
உள்ளவர்களை பகைத்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வது புத்திசாலித்தனம். வெளி வட்டாரத்தில்
கவனமாக இருப்பதன் மூலம் எதிர்பாராத சங்கடங்களில் சிக்காமலிருப்பதோடு மன அமைதியும்
சிதறாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பரிகாரங்கள்: அதிகமான கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள், செவ்வாய்க் கிழமை தோறும்
முருகன் சன்னதியில் தீப விளக்கேற்றி, முருகனுக்குரிய மந்திரங்களைக் கூறி வர கடன்
தொல்லைகள் படிப்படியாய் குறையும். பிள்ளைகளின் திருமணம் நல்லபடியாக நடந்தேற வியாழன்
தோறும் குருவிற்கு கொண்டைக் கடலை மாலை அணிவித்து வழிபட்டு வரவும்.

Anda mungkin juga menyukai